Sunday, April 9, 2017

முபாரக் - முர்ஸி - சிசி
டேனியல் மப்சூத் ( Daniel Mabsout)
தமிழில்: நாவ­லப்­பிட்டி முஹம்மத் றஸீன்


 ஊழல் குற்­றச்­சாட்டின் பேரில் மூன்று ஆண்­டுகள் மருத்­து­­­னையில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த ஹொஸ்னி முபாரக் தற்­போது அங்­கி­ருந்து விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார். அரபு வசந்த காலத்தில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­­தற்­கான கட்­­ளை­களை பிறப்­பித்த குற்­றத்­தி­லி­ருந்தும் அவர் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.



இதனால் முபாரக் தனது தவணைக் காலத்தை முடித்­துக்­கொண்டு ஒரு புதிய வாழ்க்­கையை ஆரம்­பிக்­­வென  அல் ஜதி­தாவில் அவ­ரது இல்­லத்­திற்கு திரும்­பி­யுள்ளார். ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வதன் மூலம் அதனைத் தொடங்­­வுள்­ளதா­கவும் அவர் அறி­வித்­துள்ளார்.

இந்த அரபு வசந்தம் எகிப்­துக்கு புதிய வாழ்க்­கையை கொண்டு வர­வில்லை என்றே சொல்ல வேண்டும். முபாரக் அகற்­றப்­பட்­டாலும் கூட அங்கு மறு­பி­றப்பு ஒன்று இல்லை. உலக ஒழுங்கு ஏற்­­னவே முபா­ரக்கின் வாரிசைத் தெரிவு செய்தே இருந்­தது. ஒரு இடை­மாறும் காலத்­திற்கு பிறகு அது சாத்­தி­­மா­னது.

அதா­வது ஜனா­தி­பதி முர்சி உண்­மை­யான வாரிசு கடந்து வரும் ஒரு பால­மா­கவே இருந்தார். உண்மை என்­­வென்றால், முபா­ரக்­குக்கு பின்னர் ஒரு இரா­ணுவ ஆட்­சியை ஏற்­­டுத்­து­வது பொருத்­­மா­­தாக இருக்­­வில்லை. புரட்சி என்று அழைக்­கப்­படும் ஒன்றை இரா­ணுவ எதேச்­சா­தி­கா­ரத்தின் மூலம் பதி­லீடு செய்­வது சரி­யாக இருக்­காது எனக் கரு­தப்­பட்­டது. எனவே ஒரு இடை­மாறும் காலம் அவ­சி­­மாக இருந்­தது. அது ஜனா­தி­பதி முர்சி மூலம் சாத்­தி­­மா­னது.

முர்­சியும் சரி முஸ்லிம் சகோ­­ரத்­துவ இயக்­கமும் சரி உலக ஒழுங்கின் போக்கை சரி­யாகப் புரிந்­து­கொள்­­வில்லை. அவர்கள் பொருத்­­மா­­வர்கள் என்­பதால், அவர்கள் வேட்­பா­­ரா­கவே தெரி­யப்­பட்­டுள்­ளனர் என எண்­ணினர். அது அவர்­களை ஒரு முடி­வுக்­குக்கு கொண்­டு­­ரு­வற்கு விரிக்­கப்­பட்ட வலை என்­பதை அவர்கள் உண­­வில்லை. ஏனெனில் அவர்கள் எகிப்­துக்கு ஏனைய கட்­சி­யினர் பிர­தி­நி­தித்­துவம் செய்­யாத சுதந்­திரம் மற்றும் சுயாட்­சிக்­கான ஒரு சாத்­தி­யப்­பாட்­டையே பிர­தி­நி­தித்­துவம் செய்­தனர்.

முர்சி ஆட்சி செய்ய அனு­­திக்­கப்­­­வில்லை என்று கூறு­­தற்­கான அவ­சி­யமே இல்லை, ஏனெனில் இதுவே உண்மை. ஆரம்­பத்தில் இருந்து, அவர் தீர்­மா­னங்­களை எடுத்து நடை­மு­றைப்­­டுத்­து­வது தடுக்­கப்­பட்டே வந்­தது. எனவே அவர் தனது சிறப்­பு­ரி­மைகள் மற்றும் அதி­கா­ரங்­களை விரி­வாக்கல் போன்ற கடு­மை­யான நட­­டிக்­கை­களை எடுக்க வேண்­டி­யி­ருந்­தது. இதன் கார­­மாக, எகிப்­தி­யர்கள், இதனை அதி­கார துஷ்­பி­­யோகம் மற்றும் அத்­து­மீறல் எனக் கருதி அவர்­மீது குற்றம் சாட்டி  அவ­ருக்கு எதி­ராக அணி திரண்­டனர்.
உண்­மையில், அவர் எகிப்து ஜனா­தி­­தி­யாக இருக்­கவே முயற்சி செய்தார்.

அதற்­கா­கவே அவர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார் என்­பதே உண்­மை­யாகும். ஆனால் உலக ஒழுங்கு வேறொன்றைத்  தீர்­மா­னித்­தி­ருந்­தது. முஸ்லிம் சகோ­­ரத்­து­­வா­திகள் அல்­லது இஸ்­லா­மிய கட்­சிகள் வெறு­மனே ஆட்­சி­யி­லி­ருந்து அகற்­றப்­­டு­­தற்­கென்றே ஆட்­சியில் அமர்த்­தப்­­டு­கின்­றனர். அல்­ஜீ­ரி­யா­விலும் சோமா­லி­யா­விலும் இதுவே நடந்­தது. இதுவே எகிப்­திலும் நடந்­தே­றி­யது. சரி­யான தரு­ணத்தில் தூக்கி எறி­­தற்­கென்றே அவர்கள் அதி­கா­ரத்தில் அமர்த்­தப்­பட்­டனர்.

பெய­­ளவில் மட்­டுமே எகிப்தில் மாற்றம் ஏற்­­­வேண்டும் என்­பது நீண்ட நாட்­­ளுக்கு முன்பே எடுக்­கப்­பட்ட தீர்­மா­­மாகும். முபா­ரக்கின் அதி­காரம் அகற்­றப்­பட்­­தற்கு ஒரே காரணம் அவ­ருக்குப் பின் அவ­ரது மகன் ஜமாலைப் பத­வி­யி­­மர்த்த அவர் எடுத்த தீர்­மா­னத்தை நாடு தாங்­காது என்­­துதான்.

ஏனெனில் முபா­ரக்கின் திட்டம் நிறை­வேறி இருந்தால் எகிப்து உண்­மை­யான எழுச்­சியை எதிர்­நேக்­கி­யி­ருக்கும். என­வேதான் உலக வல்­லா­திக்கம் எந்த விலை கொடுத்­தா­வது அதனைத் தவிர்க்க விரும்­பி­யது.  இதற்­கா­கவே ஒவ்­வொரு அம்­சத்­திலும் ஒரு போலிப் புரட்சி பதா­கை­யுடன் எகிப்­திய வசந்தம் உரு­வாக்­கப்­பட்­டது. மில்­லியன் கணக்­கான எகிப்­தி­யர்­களின் பேர­ணி­யுடன் பெற்ற வெற்றி வன்­மு­றை­யா­ளர்­களால் அரங்­கேற்­றப்­பட்ட ஒரு இரா­ணுவ சதிப் புரட்­சியில் முடிந்­தது.

மில்­லியன் கணக்­கான மக்­களை ஒரு இரா­ணுவ ஆட்­சிக்கு அழைப்பு விடுப்­பது என்­பது நடை­முறை சாத்­தி­­மில்­லா­ததும் வியப்­புக்­கு­ரிய விட­­மு­மாகும். ஆனால் இது வெளி­நாட்டு தூத­­கங்கள் மற்றும் தன்­னார்வ தொண்டு நிறு­­னங்கள் மூலம் மிகவும் சாதுர்­­மாக வடி­­மைக்­கப்­பட்­டி­ருந்­தது.

அத்­துடன் எகிப்­திய சமூகம் உலக அள­வி­லான மிக வெளிப்­­டை­யான மற்றும் ஊடு­ரு­வக்­கூ­டிய சமூ­கங்­களில் ஒன்­றாக இருந்­ததும் அவர்­­ளுக்கு சாத­­மாக அமைந்­தது. இதனால், மில்­லியன் கணக்­கான மக்கள் மாற்­றத்­துக்­கான அழைப்­புடன் மனுக்­களில் கையெ­ழுத்­திட்டு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டதைக் காண நேர்ந்­தது. இது முபாரக் ஆட்­சியின் போது புல­னாய்வுத் துறைத் தலை­­ராக இருந்த ஒரு மூன்­றாந்­தர அதி­கா­ரியின்  கொடூர ஆட்­சிக்கு அவர்­களை இட்டுச் சென்­றது!

எகிப்­திய வசந்தம் என்­பது இவ்­­­வுதான். உண்­மை­யாக எது­வுமே மாற­வில்லை, இப்­போது, எகிப்து புரட்­சிக்கு நெருக்­­மான ஒன்றைக் காண்­­தற்கு இன்னும் பத்து ஆண்­டு­­ளுக்கு மேல் காத்­தி­ருக்க வேண்­டி­யுள்­ளது. எனவே அரபு வசந்தம் என்­பது கருக்­­லைப்பு சிகிச்சை ஒன்றே அன்றி வேறில்லை.

இது­வரை நடந்­­வற்­றுக்­கான உண்­மை­யான விளக்கம் இது­வே­யாகும். ஈரான், சிரிய ஆட்­சிக்கு எதி­ரான நிலைப்­பாட்டை எடுப்­பதன் மூலம் உலக ஒழுங்கின் தயவைப் பெற முர்சி முழு முயற்­சியை மேற்­கொண்டார். அது பய­­ளிக்கும் எனவும் எதிர்­பார்த்தார். ஆனால் அது வெறும் கானல் நீரா­யிற்று. தனக்கு சார்­பாக பேசக்­கூ­டி­­தாக இருக்கும் என எண்ணி இஸ்­ரே­லிய அதி­கா­ரி­­ளி­டம்­கூட தொடர்பு கொண்டார். எர்­டோகன் ஒரு போலி முஸ்லிம் சகோ­­ரத்­து­­வாதி, ஆனால் அவர் ஒரு உண்­மை­யான நேட்டோ சொத்து என்­பதை மறந்து, அவரைப் போல தாம் உலக வல்­­­சு­களால் பரா­­ரிக்­கப்­பட்டு பதவி உயர்வும் வழங்­கப்­படும் என எதிர்­பார்த்­தி­ருந்தார்.  எகிப்து முஸ்லிம் சகோ­­ரத்­து­­வா­திகள் ஹமாஸ் இயக்­கத்­தோடு நெருங்­கிய தொடர்­பு­டை­­வர்கள் என்­­தையும் அவர் மறந்­து­விட்டார். எனவே, உலக ஒழுங்கு முத­லா­வதை அகற்­று­வதன் மூலம், இரண்­டா­­தையும் இல­கு­வாக நீக்க முடியும் என நம்­பி­யதில் ஒன்றும் வியப்­பில்லை. அதன்­மூலம், முஸ்லிம் சகோ­­ரத்­து­வத்தை எகிப்து மற்றும் பாலஸ்­தீ­னத்தில் இருந்து முற்­றாக ஒழிப்­பதே அவர்­­ளது இறுதி இலக்­காக இருந்­தது.

இப்­போது, முபாரக் சுதந்திர மனிதர் மட்டுமல்ல ஒரு ஆட்சியாளரும்கூட. அதாவது, அவர் அவரது புலனாய்வு துறை தலைவரும், இஸ்ரேலினதும் உலக ஒழுங்கினதும் இராணுவ இணைப்பாளரும், உலக ஒழுங்கு திட்டத்தின் படி மில்லியன் கணக்கான எகிப்தியர்கள் மூலம் ஆட்சிக்கு கொண்டு வரப்பட்ட பீல்ட் மார்ஷல் அப்தெல் பதாஹ் அல் சிசி, மூலம் இன்றும் ஆட்சி செய்கிறார்.

 
முபாரக் விடுதலையானார், மருத்துவமனையில் கழித்த 3 வருட தடுப்புக் காவலிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் முர்சிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலக ஒழுங்கு, இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு ஆயுதம் தாங்கிய போராட்டத்துடனான ஒரு நெருங்கிய தொடர்பை ஒருபோதும் மன்னிக்காது.

No comments:

Post a Comment