Saturday, August 25, 2018


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்கள்

பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாப் தலைவர் இம்ரான் கான் 2018 ஆகஸ்ட் 18ஆம் திகதி நாட்டின் 22வது பிரதமராகப் பதவி ஏற்றார்.

1947 ஆகஸ்ட் 14 ம் திகதி உலக வரைபடத்தில் ஒரு சுயாதீன நாடாக பாகிஸ்தான் உதயமானது. அப்போதிருந்து பாகிஸ்தானின் அரசியலானது, இராணுவச்சட்டம் உட்பட பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளது.

   
  லியாகத் அலி கான் முதல் இம்ரான் கான் வரை பதவிவகித்த பிரதமர்கள்



இந்நிலையில் பாகிஸ்தானின் ஒவ்வொரு முன்னைய பிரதமர்களை நோக்கும்போது பாகிஸ்தானிய அரசியலின் பலவீன நிலை புலப்படும்.

                                                         பிரதமர் வாசஸ்தளம்
லியாக்கத் அலி கான்: பாகிஸ்தானின் முதல் பிரதமராக    
அதன் சிற்பி முஹம்மத் அலி ஜின்னாவே விளங்குவார் என எதிர்பார்த்த அனைவரையும் அதிசயிக்கவைக்கும் வகையில் அவர் பாகிஸ்தானின் முதல் ஆளுனர் நாயகமாகநியமிக்கப்பட்டார்அவரே  லியாக்கத் அலி கானை நாட்டின் முதல் பிரதமராக நியமித்தார். ஆனால் ஒரு குறுகிய காலமே பிரதமராகப் பதவி வகித்த லியாக்கத் அலி கான் துரதிஷ்டவசமாக, 1951 அக்டோபர் 16ஆம் திகதி  படுகொலை செய்யப்பட்டார்.

குவாஜா நஸிமுத்தீன் அக்டோபர் 17, 1951 அன்று இரண்டாவது பிரதமராக நியமனமானார். ஆனால் அன்றைய ஆளுநர் நாயகம் மாலிக் குலாம் முகம்மத் ஏப்ரல் 17, 1953 அன்று அவரது அரசாங்கத்தை கலைத்மையால் அவர் பதவி துறந்தார்.
முகம்மத் அலி போக்ரா 1953 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி நாட்டின் மூன்றாவது பிரதமராக நியமிக்கப்பட்டார். இராஜதந்திரியான இவர் பாகிஸ்தானிய அரசியலில் ஒரு அறியப்படாத ஆளுமை.  இவர் செயற்திறன் அமைச்சொன்றை  நிறுவினார், ஆனால் 1954 சட்டமன்ற தேர்தல்களின் பின் அவரது நிர்வாகம் ஆகஸ்ட் 12, 1955 இல் ஆளுனரால் கலைக்கப்பட்டது.

சௌத்ரி முகம்மத் அலி 1955, ஆகஸ்ட் 12 ம் திகதி பாகிஸ்தானின் நான்காவது பிரதமர் ஆனார். முஸ்லீம் லீக், அவாமி லீக் மற்றும் குடியரசுக் கட்சி ஆகியவற்றின் முதலாவது கூட்டரசாங்கத்தின் மூலம் நியமிக்கப்பட்ட அவர் ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியைத் தொடர்ந்து, செப்டம்பர் 12, 1956இல் தனது சொந்த கட்சியினாலேயே தூக்கியெறியப்பட்டார்.

ஹுசைன் ஷஹீத் சுஹ்ரவர்தி செப்டம்பர் 12, 1956 இல் நாட்டின் ஐந்தாவது பிரதமராக நியமனமானார். சட்டத்துறையில் அவரது திறமை காரணமாக பிரபலமான சுஹர்வர்தி, அவருடைய கட்சி அவருடைய கட்டுப்பாட்டை மீறி செயலபட்டதாலும்; தனது நிர்வாகத்தில் கூட்டணி பங்காளிகளின் ஆதரவை இழந்ததன் காரணமாகவும் அக்டோபர் 17, 1957 அன்று பதவி விலகினார்.

இப்ராஹிம் இஸ்மாயில் சண்ட்ரிகார் 1957, அக்டோபர் 17 இல் பாக்கிஸ்தானின் ஆறாவது பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 1957 டிசம்பர் 16இல் குடியரசுக் கட்சி மற்றும் அவாமி லீக் இணைந்து கொண்டுவந்த  நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றியடைந்ததால்; 55 நாட்களில் அவர் பதவி துறந்தார்.

நூருல் அமின் 1971 பொதுத் தேர்தலை அடுத்து டிசம்பர் 7, 1971 அன்று நாட்டின் எட்டாவது பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் டிசம்பர் 20, 1971 வரை 13 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்தார். அதேநேரம் 1970 முதல் 1972 வரை இவரே பாக்கிஸ்தானின் முதலாவதும் ஒரே துணை ஜனாதிபதியாகவும் விளங்கினார்.

ஸுல்பிகார் அலி பூட்டோ, 1973 ஆகஸ்ட் 14 ஆம் திகதி நாட்டின் ஒன்பதாவது பிரதமராக ஆனார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஸ்தாபகரான இவர் 1977 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் திகதி அவரால் நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதியான ஜெனரல் ஸியா உல் ஹக், என்பவரால் 1977இல் இராணுவச் சட்டத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

முஹம்மது கான் ஜுனேஜோ, 1985 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி, பாகிஸ்தான் சார்பில் கட்சி அடிப்படையிலில்லாத தேர்தலொன்றில் சுயேட்சை வேட்பாளராக வென்று 10வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பதவிக்கு வருமுன்பும் வந்த பின்பும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்குக்காகவே அவர் பணியாற்றினார். மே 29, 1988; அரசியலமைப்பின் எட்டாவது திருத்தத்தின்படி ஜனாதிபதி ஸியா உல் ஹக்; அவரைப் பதவி நீக்கம் செய்தார்.

பெனாசீர் பூட்டோ, டிசம்பர் 2, 1988இல் பாகிஸ்தானின் 11வதும் முதல் பெண் பிரதமராகவும்; பதவியேற்றார். ஆகஸ்ட் 6, 1990 இல் ஜனாதிபதி குலாம் இஷாக் கான், அரசாங்கத்தின் ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க இயலாமை போன்றவற்றைக் காரணங்காட்டி அரசியலமைப்பின் எட்டாவது திருத்தத்தின் கீழ் பூட்டோவின் அரசாங்கத்தைப் பதவிநீக்கம் செய்தார்.

நவாஸ் ஷெரிப், அவரது கட்சியான இஸ்லாமி ஜம்ஹூரி இத்திஹாத் மூலம் நவம்பர் 1, 1990இல் பாகிஸ்தானின் 12 வது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனாதிபதி குலாம் இஷாக் கான் ஏப்ரல் 1993இல் அவரது அரசாங்கத்தைக் கலைத்தார், அது பின்னர் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்டது. 1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி ஜனாதிபதியும் அகற்றப்படவேண்டும்; என்ற ஒரு உடன்பாட்டுடனான பேச்சுவார்த்தையின் முடிவாக ஷெரீப் ராஜினாமா செய்தார்.

பெனாசீர் பூட்டோ, அக்டோபர் 19, 1993இல் இரண்டாவது முறையாகப் பிரதமரானார். நவம்பர் 5, 1996இல் ஜனாதிபதி பாரூக் லெகாரியால் அவரது அரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்படும் வரை பாகிஸ்தானின் 13 வது பிரதமராக அவர் பணியாற்றினார்.

நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (N) தலைவரான இவர் மீண்டும் பிப்ரவரி 17, 1997 இல் பாகிஸ்தானின் 14வது பிரதமரானார். அக்டோபர் 12, 1999ஆம் திகதி ஜெனரல் பர்வீஸ் முஷர்ரப் நாடு முழுவதற்குமான இராணுவ சட்டத்தைப் பிரகடனப்படுத்தி நவாஸ் ஷெரீபைப் பதவி நீக்கம் செய்தார்.

மிர் ஸபருல்லா கான் ஜமலி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் () மூலம் இவர் நவம்பர் 23, 2002இல் பாகிஸ்தானின் 15வது பிரதமராக தெரிவானார். அவர் பர்வேஸ் முஷர்ரபின் வெளியுறவு மற்றும் பொருளாதார கொள்கைகளைத் தொடர்ந்தார், ஆனால் தொடர்ந்து பதவி வகிக்க முடியாத நிலையில்; ஜூன் 26, 2004 அன்று பதவியிலிருந்து விலகினார்.

சவுத்ரி ஸுஜாத் ஹுசைன், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் () மூலம் ஜூன் 30, 2004 அன்று பாகிஸ்தானின் 16 வது பிரதமராக ஆனார். ஷவுக்கத்; அஸீஸ் அஸீஸ் நிரந்தரமாக பிரதமர் பதவியில் அமரும் வரை 50 நாட்கள் அப்பதவியை வகித்தார். ஜூன் 30, 2004 அன்று அவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

ஷவுக்கத்; அஸீஸ் அஸீஸ், பாகிஸ்தானின் 17 வது பிரதமராக ஆகஸ்ட் 28, 2004இல் பொறுப்பேற்றார். அவர் நவம்பர் 15, 2007 அன்று பாராளுமன்ற காலத் தவணை முடிவில் பதவியில் இருந்து விலகினார். பாராளுமன்ற காலத் தவணை முடிவில் பதவி துறந்த முதல் பாகிஸ்தானின்; பிரதமராக இவர் விளங்குகிறார்

யூசுஃப் ராஸா கில்லானி, பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரான இவர் மார்ச் 25, 2008 அன்று பாகிஸ்தானின் 18 வது பிரதமராக ஆனார். அவர் ஜூன் 19, 2012 அன்று உச்ச நீதிமன்றத்தை அவமதித்ததற்காக, நாடாளுமன்ற ஆசனத்துக்குத் தகுதியற்றவரானார்.

ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் ஜூலை 22, 2012 அன்று பாகிஸ்தானின் 19வது பிரதமராகப் பதவியேற்றார். 2013 மார்ச் 24 வரை நாடாளுமன்றம் அதன் ஐந்து ஆண்டு காலத் தவணை முடிவடையும் வரை அவர் சேவை செய்தார்.
நவாஸ் ஷெரீப் மூன்றாம் முறையாக ஜூன் 5, 2013இல் பாகிஸ்தான் பிரதமர் பதவியில் அமர்ந்தார். ஜூலை 28, 2017 ஆம் ஆண்டு வரை 20 வது பிரதமராக பணியாற்றிய அவர். ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளியாக் காணப்பட்டதால் அவர் பதவியிழந்தார்.

ஷஹீத் ஹகான் அப்பாஸி, பாகிஸ்தானின் 21வது பிரதமராகப் பதவியேற்ற பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக்-N இன் மற்றொரு மூத்த தலைவராவார். நவாஸ் ஷெரிப் அகற்றப்பட்ட பிறகு இவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாராளுமன்றம் அதன் ஐந்து ஆண்டு காலத் தவணையை நிறைவு செய்த 31 மே 2018 வரை பதவி இவர் வகித்தார்.

மேலே உள்ள பாகிஸ்தானின் 21 முன்னாள் பிரதமர்களில்; எவருமே அரசியல் யாப்பில் குறிக்கப்பட்ட ஐந்து வருட காலத் தவணையைப் பூர்த்திசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ரு உலக சாதனையாகவும் இருக்கலாம்.


இன்றுவரை உயிரோடு இருக்கும் முன்னைய பிரதமர்கள்

இந்தப் பின்னணியிலேயே இம்ரான்கான் பாகிஸ்தானின் 22வது பிரதமராகப் பதவியேற்றுள்ளார். சிறந்த முற்போக்குத் திட்டங்களுடன் பதவிக்கு வந்துள்ள இவர் அவற்றை வெற்றிகரமாக முன்னெடுத்து ஒரு நவீன பாகிஸ்தானை உருவாக்குவாரா? பல்வேறு கலவரங்களும் மதப் பிரிவினைவாதங்களும் பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடுகளும் நிறைந்த பாகிஸ்தானை அமைதிப்படுத்துவாரா? என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியவை. குறைந்தபட்சம் இவராவது முழுப் பாராளுமன்றத் தவணையைப் பூர்த்திசெய்த முதல் பிரதமராக வந்தாலே அதுவும் ஒரு சாதனைதான்! 

தொகுப்பு: முஹம்மத் றஸீன், நாவலப்பிட்டி

No comments:

Post a Comment